மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:
அறிவிக்கை | ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) |
காலியிடங்கள் | சுமார் 4500 |
பணியின் பெயர் | இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’) |
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் | 04.01.2023 |
சம்பளம் | இளநிலை எழுத்தர்/இளநிலை செயலக உதவியாளர்: ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை (சம்பள நிலை 2) தரவு உள்ளிடும் பணியாளர்: ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை (சம்பள நிலை -5) தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை |
கல்வித் தகுதி | பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது | 01.01.2022 அன்று வயது 18-க்கு மேலும், 27-க்கு கீழும் இருக்க வேண்டும். |
விண்ணப்பிப்பது எப்படி? | ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். |
வயது வரம்பில் தளர்வு:
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.