சினிமாவில் வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் பெண்களுக்குத்தான் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இருக்கிறது என்றால், ஆண்களுக்கும் இந்த டார்ச்சர் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நடிகைகள் இதை தைரியமாக வெளியே சொல்கின்றனர். ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பொதுப்படையாக பேச தயங்குகின்றனர். இருப்பினும், சில விஷயங்கள் மீடியாவில் கசிந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படித்தான் 45 வயதை நெருங்கும் நடிகை ஒருவர் இளம் வாலிபர்களாக பார்த்து டார்கெட் செய்து வருகிறாராம். ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த அந்த நடிகை இப்போது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு 18, 19 வயது வாலிபர்களின் மேல் எப்போதும் ஒரு கண் இருக்குமாம்.
ஒருமுறை இவர் தனக்கு நெருக்கமான சீரியல் நடிகை ஒருவரிடம் விளம்பர படம் எடுக்க போகிறேன். இளம் வயது பசங்களாக இருந்தால் நடிக்க அனுப்பு என்று கேட்டிருக்கிறார். அதை நம்பி அந்த நடிகையும் தனக்குத் தெரிந்த ஒருவரை அந்த சூட்டிங்கில் பங்கேற்க அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அங்கு சென்ற அந்த வாலிபர், இந்த வாய்ப்பே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடி வந்துள்ளார். ஏனென்றால் அந்த 45 வயது ஆன்ட்டி அந்த வாலிபரிடம் இதில் நடிக்க வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையை பகிர வேண்டும் என்று ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த நபர், ஆண்களுக்கும் கற்பு உண்டு என்று கூறி அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
அதன் பிறகு அந்த ஆன்ட்டி நடிகை வேறு ஒருவருக்கு வலை வீசி இருக்கிறார். ஆனால், இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட அந்த சீரியல் நடிகை உன் சகவாசமே வேண்டாம் என்று அவரின் நட்பை முற்றிலுமாக துண்டித்து விட்டாராம். அந்த நடிகையின் மறு முகத்தை கேள்விப்பட்ட திரை பிரபலங்கள் இப்போது வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.