TNPSC குரூப்-1 தேர்வுக்கு 13-ம் தேதி தான் கடைசி நாள்…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ…

குரூப்-1சி முதல்நிலைத் தேர்வுக்கு ஜனவரி 13-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் ஜனவரி 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் மேற்காெள்ளலாம். முதல்நிலைத் தேர்வு 2023 ஏப்ரல் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் நடைபெறும். முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் வெளியிடப்படும். கல்வித்தகுதியாக இளநிலை, முதுநிலைப் பட்டத்துடன், பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் நிலைத்தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கான தேர்வு திட்டத்தின்படி, கட்டாயத் தமிழ்மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத் தரம்) விரித்துரைக்கும் வகையில் 3 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

குழந்தை பெற்றெடுக்கும் தம்பிதியினருக்கு 3 லட்சம்!!! அதிரடியாக அறிவித்த நாடு எது தெரியுமா?

Thu Dec 15 , 2022
இந்தியாவில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரித்து வருவதால் ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ , ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ போன்ற விழிப்புணர்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் பல நாடுகளில் குழந்தை பிறப்பை அரசுகள் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதே […]
Keeping Your Marriage Strong Through the Stressful Time of Child Birth couples

You May Like