சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்பா தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயக்கின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது “சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ 27.276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன. சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
நவம்பர் 2021 மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை குறைவாகவே இருக்கிறது. தமிழகம்,மேற்கு வங்காளம், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் வரியை குறைக்காததால், அங்கெல்லாம் விலை அதிகமாகவே இருக்கிறது” என தெரிவித்தார்.