சக மாணவர்கள் நெஞ்சில் குதித்ததில், 2ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சிவம்(7) என்ற 2-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களுடன் சண்டையிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டையின் போது சக மாணவர்கள் நெஞ்சில் குதித்ததில் சிறுவன் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் அறிக்கை கிடைத்ததும், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsnation_Admin

Next Post

யாரு பப்பு...? MP-க்கு தன்னுடைய ஸ்டைலில் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்...!

Fri Dec 16 , 2022
பொதுவாக பாஜகவினர் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தியை பப்பு என்ற அடைமொழி பெயர் வைத்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா; பா.ஜ.க அரசு தான் `பப்பு’ என்ற வார்த்தையை உருவாக்கியது. திறமையின்மையைக் குறிக்க இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் புள்ளிவிவரங்கள் உண்மையான பப்பு யார் என்பதைக் காட்டுகிறது. நாட்டில் தொழில்துறை உற்பத்தி அக்டோபர் மாதத்தில், கடந்த 26 மாதங்களில் இல்லாத […]
images 2022 12 16T062523.736

You May Like