பள்ளியில் ஆசிரியையுடன் தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்த மாணவனை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிலகுலபொடி பகுதியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பிரசாத் (48) என்பவர் இருந்து வருகிறார். இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கு திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் ஆனந்த் பிரசாத்துக்கும் திருமணமாகி விட்டது. அப்பள்ளிக்கு மொத்தமே 2 ஆசிரியர் என்பதால் இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்தவுடன் தனது ரூமுக்கு டீச்சரை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் ஆனந்த் பிரசாத் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது இதனை கவனித்த ஒரு மாணவன், செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அதே நேரம் மாணவன் வீடியோ எடுப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து, வீடியோ எடுத்த மாணவனை ஆனந்த் பிரசாத் பிரம்பால் அடித்து தாக்கியுள்ளார். மேலும், மாணவனின் செல்போனை பிடுங்கி அதிலிருந்த வீடியோவையும் டெலிட் செய்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே அந்த உல்லாச வீடியோவை வாட்ஸ்அப்-ல் தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் அனுப்பி வைத்து விட்டார். இதுகுறித்து அறிந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலைமை ஆசிரியர் ஆனந்த் பிரசாத்தை கைது செய்தனர். அத்துடன் தலைமை ஆசிரியரின் செயல் பற்றி கிருஷ்ணா மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். மேலும், ஆனந்த் பிரசாத்தை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.