சான்றிதழ் பதிவிறக்கம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![ஆசிரியர் தகுதித் தேர்வு..!! சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி..? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/10/staff-1024x573.jpeg)
அதன்படி, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மூன்று மாதங்கள் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர அரசு நடத்தும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.