ஆவடி மாநகர காவல் ஆணையரகம் திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூர்த்தி நகர், நாகாத்தம்மன் கோவில் தெரு, வசிப்பவர் ஹரிஷ் சங்கர்(25). இவர் நேற்றைய தினம் தனது தாயாருடன், 40 சவரன் நகை கொடுக்க அக்காவீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார. அப்போது வளைவில் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக் மீது உரசியபோது, மாட்டி வைத்திருந்த பை அந்த இடத்திலேயே விழுந்தது.
இதை கவனிக்காமல் சென்ற ஹரிஷ் சங்கர், அக்கா வீட்டிற்கு சென்று அவருக்கு நகை கொடுக்க பார்த்தபோது அந்த பையை காணவில்லை. இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்டு அப்பொகுதியில் இருந்த CCTV கேமராவை ஆய்வு செய்தபோது, கீழே விழுந்த நகை வைத்திருந்த பையை அருகில் இருந்தா முதியவர் வீட்டினுள் எடுத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 40 சவரன் நகையை சுமார் 2 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர். பிறகு இன்று காலை ஆவடி காவல் ஆணையாளர் திரு.சந்திப்ராய் ராத்தோர் அவர்கள் உரியவர்களை நேரில் அழைத்து நகைகளை பத்திரமாக எடுத்துச் செல்லவேண்டும் என அறிவுரை வழங்கி ஒப்படைத்தார். சுமார் 16 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகையை 2மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.