இளம்பெண்ணை 12 கி.மீ. காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி மாநிலம் காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் சிக்கி அஞ்சலி என்கிற 20 வயது பெண் ஒருவர், சுமார் 12 கி.மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணம் செய்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலியான பெண்ணின் குடும்பத்தார் உரியிழந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் போலீசார் குரவாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற வழக்கில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும், கைது செய்யப்பட்டுள்ள 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் வெட்கக்கேடானது என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.