தமிழகத்தில் மீண்டும் தொடங்கும் மழை…! 6-ம் தேதி வரை… வானிலை மையம் தகவல்…!

தமிழகத்தில் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை முதல் 6-ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மாநிலத்தில் சோகம்...! பிரபல சித்தேஸ்வர சுவாமி காலமானார்...! அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Tue Jan 3 , 2023
பிரபல கர்நாடக துறவி சித்தேஸ்வர சுவாமிகள் உடல் குறைவால் காலமானார். பிரபல கர்நாடக துறவியும், மூத்த லிங்காயத் துறவியுமான சித்தேஸ்வர சுவாமிகள், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 81. உடல் நலக்குறைவாழ் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுக்க மறுத்துள்ளார். வயது தொடர்பான நோய்களை எதிர்கொண்டு சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். இவரது மறைவு மாநிலம் முழுவதும் […]
IMG 20230103 060208

You May Like