’எனக்கு போட்டி நீயா’..? ஆத்திரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய திமுக கவுன்சிலர்..!!

சித்தோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் மீது திமுக கவுன்சிலர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர் திமுக 1-வது வார்டு கவுன்சிலர் கோவேந்திரன். இவர் சித்தோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகிலேயே அர்ஜூனன் என்பவரின் ஹோட்டலும் செயல்பட்டு வருகிறது. இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டியால் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை காரில் வந்த கோவேந்திரன், அர்ஜூனனின் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார். இதில், கடையின் முன் பகுதியில் இருந்த ப்ரிட்ஜ் மற்றும் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.

’எனக்கு போட்டி நீயா’..? ஆத்திரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய திமுக கவுன்சிலர்..!!

இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு, உண்மைத் தன்மையை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சித்தோடு போலீசாருக்கு உத்தரவிட்டார். தொழில் போட்டி காரணமாக திமுக கவுன்சிலர் கோவேந்திரன் செய்துள்ள இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! மிகப்பெரிய ட்விஸ்ட் வைத்த தமிழக அரசு..!! இவர்களுக்கு கிடையாதாம்..!!

Sun Jan 8 , 2023
தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி, இதுவரை நகைக்கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என அடுத்தடுத்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு […]
1000

You May Like