நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்து பயணம் செய்யும் போது, விழுப்புரத்தில் இறங்கி இரண்டு நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் அதே டிக்கெட்டில் சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், இந்த திட்டத்தை இந்தியன் ரயில்வேதான் வழங்குகிறது.

’பிரேக் ஜர்னி’ திட்டம் என்பது சுமார் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் 2 நாட்கள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் பயணத்தைத் தொடரலாம். இது 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதேபோல் 1,000 கி.மீ பயணம் செய்வோர் இருமுறை இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு 501 கிலோமீட்டரில் உள்ள ரயில்நிலையத்தில் இறங்கி அங்குள்ள ஸ்டேஷன் மாஸ்டரிம் டிக்கெட்டில் கையொப்பம் பெற்று மீண்டும் பயணத்தைத் தொடரலாம்.

பயணத்தின் போது நீங்கள் செல்லும் ரயிலில் ஏதேனும் தாமதம் ஆனால், அதைச் சமாளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 3 மணிநேர இடைவெளியில் ரயில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சலுகை ஜன் சதாப்தி, சதாப்தி, ராஜஸ்தானி போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க முடியாது. அதேபோல் இந்த பிரேக் ஜர்னி சலுகைக்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாது. அதற்கு மாறாக டிக்கெட் கவுண்டர்களில் வாங்கிக் கொள்ளலாம்.