போகி பண்டிகையின் போது புகையை உருவாக்கும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொங்கலுக்கு முந்தைய போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் கழிவுப்பொருட்களை எரிப்பது வழக்கம். விமான நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது உருவாகும் புகையினால் கடந்த 2018 ஆம் ஆண்டில் விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பல்வேறு விமானங்கள் திசை திருப்பம்/ ரத்து/ தாமதமாக வருவதற்கு காரணமாக அமைந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய நிர்வாகம் சார்பாக போகிப் பண்டிகையின் போது புகை ஏற்படுத்தும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என சென்னை விமான நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது