பொதுமக்கள் அனைவரும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம்…! சென்னை விமான நிலையம் கோரிக்கை…!

போகி பண்டிகையின் போது புகையை உருவாக்கும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொங்கலுக்கு முந்தைய போகிப் பண்டிகையின்போது பொதுமக்கள் கழிவுப்பொருட்களை எரிப்பது வழக்கம். விமான நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது உருவாகும் புகையினால் கடந்த 2018 ஆம் ஆண்டில் விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பல்வேறு விமானங்கள் திசை திருப்பம்/ ரத்து/ தாமதமாக வருவதற்கு காரணமாக அமைந்தது.


இதையடுத்து சென்னை விமான நிலைய நிர்வாகம் சார்பாக போகிப் பண்டிகையின் போது புகை ஏற்படுத்தும் கழிவு பொருட்களை எரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என சென்னை விமான நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

வரி செலுத்தலாம்... விண்ணப்பிக்கலாம்..!! புதிய இணையதளம் தொடக்கம்..!! இனி அனைத்தும் சுலபம்தான்..!!

Thu Jan 12 , 2023
சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள், தங்களுக்கு தேவையான வசதிகளை பலரும், வெளியில் சென்று அழையாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால், அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் சுலபமாக முடித்து விடுகின்றனர். அந்தவகையில், தற்போது சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு https://tnurbanepay.tn.gov.in என்ற புதிய இணையதள […]
வரி செலுத்தலாம்... விண்ணப்பிக்கலாம்..!! புதிய இணையதளம் தொடக்கம்..!! இனி அனைத்தும் சுலபம்தான்..!!

You May Like