பிரியாணி செய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி என்றால் அது பாசுமதி அரிசி தான். இது இந்தியாவின் இமயமலை பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் தான் விளைய வைக்கப்படுகிறது. அங்கு விளையும் நீளமான மற்றும் மணமுள்ள அரிசி மட்டுமே ஒரிஜினல் பாசுமதி அரிசி. ஆனால், ஒரு சில இடங்களில் செயற்கையாக அரிசிக்கு நிறமூட்டி, செயற்கை மனம் செலுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தற்போது அரசு உணவு தர பாதுகாப்பு நிர்ணயம் புதிய விதிகளை விதித்துள்ளது.

செயற்கை மனம், செயற்கை நிறமூட்டி பயன்படுத்தி பொதுமக்களிடம் பாசுமதி அரிசி என விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், பாசுமதி அரிசி பேக் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதன் விற்பனை பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக இவ்வாறு தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.