காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வீரணாமூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் சிம்பு (19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததை தனது நண்பர்களான சிவா (21), செல்வம் (19) ஆகியோரிடம் சிம்பு பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ’எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது’ என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிம்பு, பிறகு ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் வழக்கம் போல தனியாக சந்திக்கலாம் எனக்கூறி அந்த சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரா கார்டன் பின்புறம் சென்றுள்ளார் சிம்பு. அப்போது, அங்கு அவரது நண்பர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், சிறுமியை மிரட்டி, ஒவ்வொருவராக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, வலியால் சிறுமி அலறி துடித்துள்ளார். எதையும் பொருட்படுத்தாமல் அந்த 3 கொடூரர்களும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஆனால், அந்த சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காமக்கொடூரர்கள் 3 பேர் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.