உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, அதை வீட்டிலேயே செய்யலாம். இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தவறு அல்லது தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, தவறான நபரின் கணக்கிற்குச் செல்கிறது.

சமீபத்தில் ஒரு நபர் ஆன்லைன் மூலம் தவறாக பணத்தை செலுத்தி விட்டு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் NPCI-க்கு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த ஆணையும் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது கவனமாக இருக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். பரிவர்த்தனை செய்யும் போது பயன்படுத்தப்படும் தவறான உள்ளீடு / சரிபார்க்கப்படாத விவரங்கள் தவறான பயனாளிக்கு பணத்தை அனுப்பும். பரிவர்த்தனை செய்வதற்கு முன் பயனாளியின் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தவும். ஏதேனும் தவறான பரிமாற்றங்கள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு அதை மாற்றிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது.
வங்கிகளைப் போலல்லாமல், பணப் பரிமாற்றத்திற்கு பயனாளியின் முன் பதிவு அவசியம், UPI க்கு பயனாளியின் பதிவு தேவையில்லை. UPI மூலம் வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி/ஆதார் எண் ஆகியவற்றின் அடிப்படையில் பணம் மாற்றப்படுகிறது. எனவே, எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்கள் சரியான மொபைல் எண்ணை உள்ளிடுவது மிகவும் முக்கியமானது. ஆன்லைன் பேமெண்ட் தொடங்கப்பட்டால், அதை நிறுத்த முடியாது என்பதையும் வாடிக்கையாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் தவறாக அனுப்பிய பணத்தை பெற, பயனாளிக்கு விர்ச்சுவல் ஐடி இருக்க வேண்டும், அதையொட்டி, UPI இல் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், கணக்கு பரிமாற்ற விஷயத்தில், பயனாளி UPI க்கு பதிவு செய்யப்பட வேண்டியதில்லை.