வீட்டில் இருந்த இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தங்கலா என்ற கிராமத்தில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த தம்மையா என்கிற வாலிபர் சம்பவத்தன்று இரவு அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆர்த்தி வீட்டிற்கு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அந்த கிராமத்தின் புறநகர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் ஆர்த்தி. இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசர் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண் ஆர்த்தி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் பண்ணை குட்டை அருகே ஒரு ஹெல்மெட், விஷ பாட்டில், செல்போன், செருப்பு கிடந்திருக்கிறது. இதனை கைப்பற்றிய போலீசார், இவற்றையெல்லாம் கைப்பற்றிய போலீசார் தம்மையாவை வலைவீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் தம்மையா ஆர்த்தியை கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசில் சிக்காமல் இருக்க தம்மையா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.