மதபோதகர் மீது மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்த வர்ணிகா என்ற பெண், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகாரில், “மதுரையை சேர்ந்த நான் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருகிறேன். தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 ஆண்டுகளாக என்னுடன் நெருக்கமாக பழகி, மனைவி போல் வாழ்ந்து வந்தார். மேலும், எனக்கு தெரியாமல் சாமுவேல், சென்னையை சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார். என்னை திருமணம் செய்வதாக கூறி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து கேட்டதற்கு தனக்கு திருமணமே ஆகவில்லை என்று பொய் சொல்கிறார். மேலும், நான் தொலைபேசியில் அவரிடம் பேசினால் தகாத வார்த்தைகளைப் பேசி என்னை திட்டுகிறார். என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறார். ஏதாவது பேசினால் அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி என்னை மிரட்டுகிறார. எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்.

குடும்ப கஷ்டம் எனக்கூறி ரூ.2 லட்சம் வரை என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால், அவரது மாமா முத்துஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது போன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக மனமடைந்து தற்கொலை முயற்சி செய்த போது என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினார்கள். எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். மத போதகர் சாமுவேல் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.