குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு மத்திய செயலகம், உத்யோக் பவன் மற்றும் மண்டி ஹவுஸ் ஆகிய மூன்று மெட்ரோ நிலையங்களில் டிஎம்ஆர்சி இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ ரயில் நிர்ஞ உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மெட்ரோவின் எந்த நிலையத்திலிருந்தும் கூப்பன்கள் சேகரிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழன் காலை 04:30 முதல் 08:00 வரை பயணத்திற்கான டிக்கெட்டுகள் அல்லது கூப்பன்கள் வழங்கப்படும். இருப்பினும், இந்த கூப்பன்கள் மூலம் வெளியேறும் வழியை பிற்பகல் 02:00 மணி வரை பெறலாம். குடியரசு தின விழா முடிந்த பிறகு வழக்கம் போல பயணிகள் கட்டணம் செலுத்தி மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.