7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால்..!! கோவை பெண் சாதனை..!! குவியும் பாராட்டு..!!

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்பால் தானம் செய்திருந்தார். இந்நிலையில், கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, இதுகுறித்து தனது கணவர் பைரவிடம் தெரிவித்துள்ளார். அவரும் ஆர்வம் காட்டியதால், தாய்பால் தானம் குறித்து அறிய இணையதளத்தில் தேடி உள்ளனர்.

பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தனது 2-வது பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களில் மட்டும் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை படைத்துள்ளார். குறிப்பாக, ஸ்ரீவித்யா கொடுக்கும் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் சேர்க்கப்பட்டு அங்கு எடை குறைவாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

CHELLA

Next Post

"பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இவர்கள் தகுதியானவர்கள்"..!! வெளியான குட் நியூஸ்..!!

Thu Jan 26 , 2023
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசுப் பணிகளில் உள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைபடுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. மத்திய துணை ராணுவப் படைகள் (CAPF) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் […]
987083 986175 pension money

You May Like