ஹாங்காங் பகுதியில் 61 வயது கசாப்பு கடைக்காரர் சம்பவ தினத்தில் கறிக்காக பன்றியை கொல்ல தயாரானார். அப்போது முன்னதாகவே பன்றியே தூரத்திலிருந்து அந்த கசாப்பு கடைக்காரர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பன்றி மயங்கி விழுந்ததை கண்ட அவர் பன்றிக்கு அருகில் அரிவாளுடன் சென்றுள்ளார்.
அப்போது, திடீரென சுயநினைவு வந்த பன்றி அவரை கீழே தள்ளி ஆத்திரமாக தாக்க ஆரம்பித்துள்ளது. இதில் அந்த 61 வயது நபர் கையில் அரிவாளுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதை பார்த்த சக பணியாளர் ஓடி வந்து அவரை மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.