தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3,167 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் முழு விவரங்கள்:
பணியின் பெயர் | கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) NOTIFICATION: 17-21/2023-GDS |
காலியிடங்கள் | தமிழ்நாட்டில் 3,167, நாடு முழுவதும் 40,889 |
சம்பளம் மற்றும் படிகள் | கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM – Branch Postmaster BPM) – ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரை உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster – ABPM /Dak Sevak) – ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை |
கல்வித் தகுதி | 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு | குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) |
விண்ணப்பக் கட்டணம் | பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும் |
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023 ஆகும்.