இனி உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிடாதீர்கள்…. உயிருக்கு ஆபத்து!

உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ள அக்ரிலாமைடு என்னும் கெமிக்கல் புற்றுநோயை உண்டாக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்


உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி கல்லீரல், மூளை, பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என பல வகையில் புற்றுநோய் மனிதர்கள் ஆட்டிப்படைக்கிறது. புற்றுநோய் வருவதற்கு நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளே முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. அந்தவகையில், மைதாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் என்பதால், இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவுகளை சட்டென்று உயர்த்தும். இந்த மைதாவை அதிகளவில் உணவில் சேர்க்கும் போது, அது புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. பதப்படுத்தும் செயல்முறையின் போது குளோரின் வாயு பயன்படுத்தப்படுவதால் மைதா மாவு வெள்ளை நிறத்தில் உள்ளது. பாப்கார்ன் தயாரிக்கும் மைக்ரோவேவ் பையில் PFOA என்னும் பொருள் உள்ளது என்பது தெரியுமா? இது கணையம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு காரணமான பொருளாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸில் உப்பு மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகளவில் உள்ளன. இவை உடலுக்கு தீங்கை விளைவிகும். முக்கியமாக இவற்றில் அக்ரிலாமைடு என்னும் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் உள்ளன. எனவே உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகம் உட்கொள்ளும் போது புற்றுநோயை ஏற்படுத்துகிறது. இந்த கெமிக்கலானது சிகரெட்டிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் உள்ள நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்டுகள் புற்றுநோயுடன் தொடர்புடையவை ஆகும். மேலும் சோடாவை அதிகளவில் குடிக்கும் போது, அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.

KOKILA

Next Post

இந்த ஒரு பூ போதும்....எல்லா நோய்க்கும் தீர்வு...இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை!

Sat Feb 4 , 2023
சர்க்கரை நோய், தோல் வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் அற்புத மூலிகையாக ஆவாரை திகழ்கிறது. இதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆவாரை பூத்திருக்க , சாவாரை கண்டதுண்டோ என்ற பழமொழிக்கு ஏற்ப எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது இந்த ஆவாரை மூலிகை செடி. மேலும் போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டுவோம், அது நம்மை நோயில் […]
aavaram poo

You May Like