பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாத மெத்தையை எளிதில் சுத்தம் செய்வதற்கு ஒரு எளிமையான வீட்டுக்குறிப்பை இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளலாம்.
நம் அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது இன்றியமையாதது. தூக்கத்தை வைத்தே நமது உடலின் ஆரோக்கியம் மற்றும் செயல்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதற்குப் பெரிதும் உதவியாக இருப்பது மெத்தைகள் தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் சென்றுவிட்டு அசதியாக இருப்பதால் வீட்டிற்கு வந்தவுடன் சில நேரங்களில் மெத்தையில் அப்படியே படுத்துவிடுகின்றனர். மேலும் குழந்தைகள் மெத்தையிலேயே குதித்து விளையாடுகின்றனர். இதனால், மெத்தையில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நிறைய சேர்ந்திருக்கும். ஆனால் மெத்தைகளை எப்படி சுத்தமாக வைப்பது என்று இல்லத்தரசிகளின் கவலையாக இருக்கும். குறிப்பாக மழைக்காலம், குளிர் காலத்தில் இருந்து மெத்தையில் இருந்து வீசக்கூடிய துர்நாற்றம் அதிகமாக இருக்கும். இதனை சுத்தமாக வைக்க முதலில் மெத்தையை குச்சியை கொண்டு நன்றாக அடிக்க வேண்டும். மெத்தையில் இருக்கும் தூசுகள் வெளியேறிவிடும். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக சமையலுக்கு பயன்படுத்தும் ஆப்ப சோடா எடுத்து மெத்தைக்கு மேலே லேசாக தூவி விடுங்கள். பின்னர் 3 அல்லது 4 மணி நேரம் கழித்து துணி மூலம் ஆப்பா சோடாவை துடைத்துவிடுங்கள். புதிது போல் மெத்தை பளபளப்பாக இருக்கு. மெத்தையில் இருக்கும் கிருமி, கெட்ட வாடை அனைத்தையும் இந்த ஆப்ப சோடா உறிஞ்சிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆப்ப சோடா மூலம் டிரைனேஜில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் சரிசெய்துகொள்ளலாம்