ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கு செல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கும் வகையில் புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது.
ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக தனிப்பட்ட அடையாள எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். மேலும், வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, மின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அடையாளத்தை நிறுவ வேண்டிய பல இடங்களில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். UIDAI ஆனது ஆதார் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. வங்கிச் சேவைகள் முதல் அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது வரை – பல ஆண்டுகளாக ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறியுள்ளது. மேலும், மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை தங்கள் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது, ஆதார் கார்டு மூலம் மிக எளிதாக, இணைய வசதியே இல்லாமல் வங்கி கணக்கு இருப்பை சரிபார்க்கும் வகையில் புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏடிஎம், வங்கிக் கிளைக்குச் செல்லாமல் தங்க ங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம்.
அதன்படி, 12 இலக்க ஆதார் எண்களை வைத்து வங்கி கணக்கு இருப்பை சரிபார்க்கும் வழிமுறைகள் பின்வருமாறு: ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9999*1# என்ற நம்பரை டயல் செய்யவும். பின்னர் ஆதார் எண்ணை உள்ளிடவும், இதையடுத்து மீண்டும் ஆதார் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும், இதையடுத்து, (UIDAI) கணக்கு இருப்பின் ஃபிளாஷ் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
இதன் மூலம், நீங்கள் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும், அதன் விவரங்களும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.