பிபிசி ஊடக அலுவலகங்களில் 60 மணிநேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். கடந்த பிப்.14 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்கிய சோதனை, கிட்டத்தட்ட 3 நாட்களாக (60 மணிநேரம்) நடைபெற்றது. இதில் பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் 2 ஆவணப்படங்கள் சமீபத்தில் வெளியிட்டது. இதனை மத்திய அரசு தடை செய்திருந்த நிலையில், தடையை மீறி சில இடங்களில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-15-at-2.32.49-PM.jpeg)
இந்த ஆவணப்படம் வெளியானதை அடுத்து தான் பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 60 மணி நேர சோதனையில் பிபிசியின் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.