குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை.. அமைச்சர் உதயநிதி சொன்ன குட்நியூஸ்..

குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களே உள்ளதாக ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது..


திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய உதயநிதி “ திருமகன் ஈ.வே.ரா 9,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. ஆனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்… ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைத்தால், மாதம் ஒருமுறை இங்கே வந்து தங்குகின்றேன்.

முந்தைய ஆட்சியாளர்கள் அரசின் கஜானாவை 5 லட்சம் கோடி கடனில் வைத்திருந்தனர்.. இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா நிவாரண தொகை, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது..

குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று உறுதிமொழி கொடுக்கின்றேன்.. இந்த திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்.. நம்பர் 1 முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.. விரைவில் நம்பர் 1 மாநிலமாக வருவோம்..” என்று தெரிவித்தார்..

1newsnationuser1

Next Post

நைட் ஷிஃப்ட்டில் டீ குடிக்க வந்த ஐடி பெண் ஊழியர்..!! பின் தொடர்ந்த சக ஊழியர் செய்த காரியம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

Tue Feb 21 , 2023
சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள் என இரு தரப்பு பணியாளர்களுக்கும் இரவுநேர பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனால், பெண்களும் இப்போது அதிகளவில் இரவு பணிக்கு சென்றுவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் இளம்பெண்ணுக்கு சக ஐடி நிறுவன ஊழியரே பாலியல் தொல்லை கொடுத்த […]

You May Like