இளம்பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 பெண்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மும்பையைச் சேர்ந் மன்சூலே (27) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ”பள்ளி படிப்பை சிறு வயதிலேயே நிறுத்திய மன்சூலே, தனது பெற்றோர் இறந்த பிறகு சகோதரர்களுடன் புனேவில் வசித்து வந்துள்ளார். மன்சூலே பகுதி நேர வேலையாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்திருந்தார். சமூக வலைதளங்களில் மன்சூலே வேலை தேடும் இணையதள கணக்குகளை கண்டுபிடிப்பார். பின்பு, அவர் அந்த கணக்குகளில் உள்ள குழுக்களில் வேலை தேடும் நபர் போல இணைந்து அந்த குழுக்களில் உள்ள பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுடன் வேலை சம்பந்தமாக பேசத் தொடங்குவார். பின்னர், திடீரென ஆபாச வீடியோக்களை அனுப்பி பல பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆபாச வீடியோக்களை அனுப்பி பெண்களிடம் தவறாக பேசிக் கொண்டும் வந்துள்ளார். மேலும், வீடியோ கால் செய்து தொல்லை கொடுத்துள்ளார். வீடியோ கால்களை கட் செய்யும் பெண்களை மிரட்டுவார் என்றும் கூறப்படுகிறது. இதுவரை சுமார் 40 பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மட்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது மன்சூலேவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.