ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..!! பெரும் பின்னடைவு..!! கடைசியில் இன்ப அதிர்ச்சி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ்-க்கு அனுப்பி உள்ளனர். இது ஓபிஎஸ்- க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், முக்கிய தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் பேசி புதிய பதவி கொடுத்துள்ளார். ஈரோடு மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளராக தங்கராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக பாஸ்கரன் மற்றும் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக ஜெயப்பிரகாசை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

CHELLA

Next Post

அரசுப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு..!!

Wed Feb 22 , 2023
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பள்ளி கல்வித்துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் மட்டுமே முன்பெல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ஆனால், அதை முறியடிக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் மூலம் மாணவர், மாணவியர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்தது. இந்த கலைநிகழ்ச்சிகள் […]
school tn gove

You May Like