சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் மாலினி. இவரது மகள் கவிதா அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவருக்கு அதே கல்லூரியில் படித்து வந்த சக மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக கவிதாவுடன் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கவிதாவிடம் பேசுவதை காதலன் தவிர்த்து வந்துள்ளார். இதுபற்றி காதலனிடம் கேட்ட கவிதா, வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் நாம் இருவருக்கும் பொதுவாக செட் ஆகாது என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் கவிதா அவரிடம் சண்டை போட்டுள்ளார். அதனை அந்த மாணவன் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.