இதுக்கு ஒரு முடிவே இல்லையா!… விடாமல் துரத்தும் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள்!… ஷாக் கொடுக்கும் சர்வே முடிவுகள்! விவரம் உள்ளே!

தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்திருந்த போதிலும் தேவையற்ற அழைப்புகள் வருவதாக 92 சதவீதம் பேர் கருத்துக்கணிப்பில் பதிலளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைவரிடமும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில், முக்கியமான வேலையில் இருக்கும் போது திடீரென புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரும். போனை எடுத்தால், லோன் வேண்டுமா சார். கிரெடிட் கார்டு வேண்டுமா சார், இன்சூரன்ஸ் போடலாமே என என மார்க்கெட்டிங் ஆட்கள் பேசுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொல்லைதரும் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள் பிரச்சனை மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சமீபத்தில் டிராய், அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், உறுதி செய்யப்படாத எண்ணில் இருந்து அழைப்போ, குறுஞ்செய்தியோ வருவதை தடுக்க 30 முதல் 60 நாட்களுக்கு தீர்வு காண உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், தேவையற்ற அழைப்புகள் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் சுமார் 12,000 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்ததில் 92 சதவீதம் பேர் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்திருந்த போதிலும் தேவையற்ற அழைப்புகள் வருகின்றன என்றும் குறிப்பாக நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இருந்து தான் அதிகமான அழைப்புகள் வருகிறது என்றும் பதில் அளித்துள்ளனர். 66% பேர் ஒவ்வொரு நாளும் தினசரி 3 அல்லது நான்கிற்கும் மேற்பட்ட அழைப்புகளை பெறுவதாகவும் 96 சதவீதம் பேர் குறைந்தது ஒரு அழைப்பையாவது பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 16 சதவீதம் பேர் தினமும் சராசரியாக 6 முதல் 10 அழைப்புகளை பெறுவதாகும் ஐந்து சதவீதம் பேர் தினமும் பத்துக்கும் மேற்பட்ட தேவையற்ற அழைப்புகளை பெற்றதாகவும் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 342 மாவட்டங்களில் 56,000 பதில்களை பெற்று இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 5 வரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்யப்பட்ட போதிலும் அழைப்புகள் வருகிறதா? என்ற கேள்விக்கு 92 சதவீத பேர் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். தேவையற்ற அழைப்புகளால் தங்களது பொன்னான நேரம் வீணாவதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்

மேலும், இந்த கருத்துக்கணிப்புல் பதிலளித்தவர்களில் 15,312 பேரில் 50 சதவீதம் பேர், தனிநபர்களின் மொபைல் எண்களில் இருந்து தொல்லைதரும் அழைப்புகள் வருவதாகவும், 29 சதவீதம் பேர் நிறுவனங்கள் அல்லது பிராண்டுகளுக்கு சொந்தமான மொபைல் எண்களில் இருந்தும், 14 பேர் இது ஒரு மையப்படுத்தப்பட்ட லேண்ட்லைன் எண்ணிலிருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற சேவைத் தொழில்களில் பணிபுரியும் குடிமக்கள், தங்கள் நிறுவனங்களில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ளவர்கள் ஏஜன்சிகளை ஒப்பந்தம் செய்து அழைப்புகளை அனுப்புகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

KOKILA

Next Post

உலகின் மிக உயரமான கட்டடம் இதுதான்!... சவுதி அரேபியாவில் உருவாகும் பிரமாண்ட கட்டடம்!... ஆடம்பர வசதிகளுடன் வடிவமைக்க மெகா திட்டம்!

Thu Feb 23 , 2023
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் மையப் பகுதியில் 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 400 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கட்டடம் ஒன்று உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசு 100 மைல் நீள ஸ்கை ஸ்கிராப்பர் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. சவுதி விஷன் 2030 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத் நகரின் மையப் பகுதியில், தி […]
saudi building

You May Like