அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருளை உட்கொண்ட நபர்கள் ஜாம்பி போன்று மாறியும் உடலில் துளைகள் ஏற்பட்டு வீதிகளில் தள்ளாடும் வீடியோ வெளியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தையடுத்து போதை பயன்பாடே பெரிய அபாயமாக மாறியுள்ளது. போதைப்பொருள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் வன்முறையிலும் ஈடுபடுவதால் அவர்களை சுற்றியுள்ளவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்பாட்டிற்குக் கடுமையான தடையை விதிக்க வேண்டும் என்று பலர் கோஷங்களை எழுப்பிவருகின்றனர். போதைப்பொருள் எடுத்துக்கொள்ளும் நபர்களின் உடல்நிலை கடுமையாக பாதிப்படையும் நிலையில், அமெரிக்காவில் பல இடங்களில் மக்கள் நிற்கவே முடியாத அளவுக்கு வித்தியாசமாகத் தள்ளாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை “ஜாம்பி வைரஸ்” தாக்கியதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தகவல்கள் பரவின.
இந்தநிலையில், கடந்த ஆண்டை போலவே, அமெரிக்காவில் இந்த ஆண்டும் மக்கள் சிலபேர் நடைபிணங்கள் போல தெருவில் உலாவி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “ட்ராங்க் டோப்” மற்றும் “ஜாம்பி மருந்து” என்றும் அழைக்கப்படும் சைலாசின்(xylazine) எனப்படும் போதைப்பொருள். இது மயக்கமருந்து போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு தீவிரமான தூக்கம், சுவாசக்கோளாறு,மன அழுத்தம் நிலையாக நிற்கமுடியாததன்மை கொண்டு செல்லும் அளவிற்கு ஆபத்தானது.
இந்த போதைப்பொருள் நாம் படங்களில் பார்க்கும் “ஜாம்பி” உடலில் சருமங்களை பாதிக்கும் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.இதனால் மருந்து உபயோகிப்பவரின் தோலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும், இது மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வேகமாக பரவி உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அளவிற்கு செல்லக்கூடியது. இது புண்களுடன் தொடங்கி, எஸ்கார் எனப்படும் இறந்த சருமத்தை கடினப்படுத்துகிறது, மேலும் இதற்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உறுப்பு துண்டிக்கப்படும் அளவுக்கு சென்றுவிடும் என்றும் இதற்கு மாற்றுமருந்தே கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளராகள் கூறுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில் “ஒன்பது மாதங்களுக்கு முன்பு வரை, எனக்கு காயங்கள் இல்லை.ஆனால் இப்போது, என் கால்களிலும் கால்களிலும் துளைகள் உள்ளன என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.