தமிழகம் முழுவதும் 55,071 பேர் எழுதும் குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரிவில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் மற்றும் குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான நகராட்சிப் பணியாளர் ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 446 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 ஆயிரத்து 641 பேருக்கு இன்று முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 186 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்கள் சந்தேகம் ஏதேனும் இருப்பின் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டலைப் பார்வையிடவும்.