இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த 25ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் என்ற காரணத்தினால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.