கும்மிடிப்பூண்டி அருகே கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்கள் இடையே மோதல் வெடித்த நிலையில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பக்கத்து கிராமமான சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரம் பெரிதானதால், இரவில் இருதரப்பும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமானது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தாமல் உள்ளதாக இரு தரப்பு மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் வரப்பெற்றும் நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பையும் அழைத்து சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.