அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு..!! மாணவர்களே ரெடியா இருங்க..!! இனி தினந்தோறும் கட்டாயம்..!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மாறி வருகின்றன. அதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக நடப்பு நிகழ்வுகளை அறியும் வகையில் வாசிப்பு மற்றும் வினாடி வினா நிகழ்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


JCERT உடன் இணைந்து பள்ளிகள் செய்தி வாசிப்பு மற்றும் வினாடி வினா நிகழ்வுகளை தினம் தோறும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வினாடி வினா மற்றும் செய்தி வாசிப்பு தொடர்பான வினாக்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும். தினம்தோறும் பள்ளி இறை வணக்க கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற வேண்டும். செய்தி வாசிப்பு மற்றும் வினாடி வினா இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

அடித்தது ஜாக்பாட்..!! ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு..!! ரூ.6 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய ஆலை..!!

Fri Mar 3 , 2023
இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், சீனாவில் இருந்து வெளியேறி கர்நாடகாவில் ரூ.6 ஆயிரம் கோடியில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களில் 3 மையங்களை கொண்டுள்ளது. இந்த ஆலையில் ஆப்பிள், ஜியோமி மற்றும் பிற எலக்ட்ரிக் நிறுவனங்களின் செல்போனுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் முதலீடு செய்வது குறித்து […]
Private job portal 16653058153x2 1 e1668649402675

You May Like