டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..!! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு..!! இதை மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் போன்றவைகள் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியான நபர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் இடம் பெற்றுள்ளவர்கள் இன்று (மார்ச் 6) முதல் 11ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களின் வயது, PSTM, கல்வித் தகுதி, உரிமைக்கோரல்களின் உண்மை நிலவரம் போன்றவைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதற்குப் பிறகு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா..? எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம தூங்கணுமா..? அப்படினா இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!!

Mon Mar 6 , 2023
தூக்கம் என்பது மனித வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகும். இது நம் உடலையும், மனதையும் ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், மன அழுத்தம், பதற்றம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலர் போதுமான தூக்கத்தைப்பெற போராடுகிறார்கள். மருந்துகள் மற்றும் சிகிச்சை உட்பட தூக்கத்தை மேம்படுத்த பல வைத்தியங்கள் இருந்தாலும், உணவு மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்கள் செய்வது தூக்கம் பெற உதவும். […]
Sleeping

You May Like