கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பகவத் கீதை, ராமாயண பாடங்கள்.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய திட்டம் தொடக்கம்..

ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய ஒரு அமைப்பு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது..

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ‘கர்ப்ப சன்ஸ்கார்’ என்ற தலைப்பில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.. அந்த அமைப்பின், தேசிய அமைப்பு செயலாளர் மாதுரி மராத்தே இந்த தகவலை தெரிவித்துள்ளார். கருவில் இருக்கும் குழந்தைக்கு, கலாச்சாரம் மற்றும் நன்மதிப்புகளை கற்பிப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.. மேலும் பேசிய அவர் “ மகப்பேறு மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்களுடன் இணைந்து, கர்ப்ப காலத்தில் கீதை, ராமாயணம் மற்றும் யோகா பயிற்சியை உள்ளடக்கிய ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது..


இதன் மூலம், கருவில் உள்ள குழந்தைகளுக்கு கலாச்சார விழுமியங்களை வழங்கப்படும்.. இந்த திட்டம் பெண் கர்ப்பமாக இருப்பது முதல் குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை தொடரும்.. கர்ப்பிணி பெண்களுக்கு, பகவத் கீதையின் ஸ்லோகங்கள், ராமாயணத்தின் போதனைகள் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் பாடம் கற்பிக்கப்படும்.. கருவில் உள்ள ஒரு குழந்தை 500 வார்த்தைகள் வரை கற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்..

‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டம் முதல்கட்டமாக, சுமார் 1,000 பெண்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் எய்ம்ஸ்-டெல்லி உட்பட பல மகளிர் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே கருவில் இருக்கும்போதே குழந்தைகள் மொழியை கற்க தொடங்குவதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பகாலத்தின் 30 வாரங்களில் செவித்திறனுக்கான உணர்ச்சி மற்றும் மூளை வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.. கருவில் உள்ள குழந்தைகள் கர்ப்பத்தின் கடைசி 10 வாரங்களில் தங்கள் அம்மாக்களின் பேச்சுகளைக் கேட்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம்!... காரணம் என்ன தெரியுமா?... விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

Tue Mar 7 , 2023
ஆப்பிரிக்காவில் வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம் உள்ளது. இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர். இதுகுறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம். மனிதர்களை போலவே வெட்டுப்பட்டால் இரத்தம் வரும் இந்த அதிசய மரம் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த அதிசய மரத்தை‘Bloodwood Tree’ என்று அழைக்கப்படுகிறது. ‘செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்’ என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த மரத்தின் பெயர் இரத்த மரம் . இதன் அறிவியல் பெயர் ‘Cerocarpus […]
blood tree

You May Like