துளசியில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ பயன்களை இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.
மூலிகைகளின் ராணி’ அழைக்கப்படும் துளசி ஆயுர்வேதத்தில் ஹோலி கிரேயில் என்று போற்றப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளின் ஒரு பகுதியான துளசி இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கிறது. இப்படி பல நன்மைகளைக்கொண்டுள்ள துளசி, உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? இம்மூலிகையானது, உங்களுக்கு ஆரோக்கியமான, பொலிவூட்டப்பட்ட மற்றும் இளமையான சருமத்தைப் பெருவதற்கு உதவுகிறது. தினமும் 10 துளசி இலைகளை ஒருவர் தினமும் தின்பதால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அண்டாது. மார்பு, தொண்டை வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.
தினமும் துளசி இலை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது உடலுக்கான கிருமி நாசினியாக செயல்படுகிறது. துளசி இலையை ஒரு செம்பு பாத்திரத்தில் கைபிடி அளவு போட்டு ஊறவைத்து அதை பருகினால் நீரழிவு வியாதி கூட கட்டுக்குள் இருக்குமாம். வெறும் வயிற்றில் இதை 48 நாட்கள் செய்தால் பல நோயும் அண்டாது. உடலில் வியர்வையால் வீசும் துர்நாற்றத்தை போக்க குளிக்கும் நீரில் முந்தைய நாள் துளசி இலைகளை போட்டு விடுங்கள். அந்த நீரில் நீராடினால் வாசனையாக இருப்பீர்கள். துளசிச் சாறு அருந்தினால் சளித் தொல்லை, ஆஸ்துமா போன்றவை குணமாகும். துளசி சாறு ஜீரண சக்தியை கூட்டும். இதயம் போன்ற உள்உறுப்புகள் சீராக இயங்க துளசி உதவுகிறது.
சருமத்தில் உள்ள படை, சொரி போன்ற நோய்களை கூட துளசி குணம் பெற செய்யும். துளசி இலையுடன், எலுமிச்சை சாறு விட்டு மையாக அரைத்து அதனை சருமத்தில் தடவி வந்தால் படை சொரி விலகும். சிறுநீர் தொடர்பான பிரச்சனை உடையவர்கள் துளசி விதையை அரைத்து உண்ண வேண்டும். அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீரும் அருந்தி வர பிரச்சனை சரியாகும். துளசி இலை சாறில் தேன், இஞ்சி போன்றவை கலந்து ஒரு தேக்கரண்டி குடிக்கலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் மூன்று வேளை மூன்று கரண்டி இந்த துளசி கஷாயம் புகட்டினால் போதும்.