மின்சாரத்தைக் கொண்டு செல்ல புதிய நடைமுறை…! மத்திய அரசுக்கு பரிந்துரை…!

மின்சாரத்தைக் கொண்டு செல்லும் நடைமுறையில் நவீனத்தையும், வேகத்தையும் இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டப் பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை ஏற்பதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடந்த வாரம் அறிவித்தார்.


மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்க வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை அடைய மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் நவீன கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறியுள்ளார். இணையதள தாக்குதல், இயற்கை பேரிடர் ஆகியவற்றுக்கு எதிராக முழுமையான தானியங்கி அமைப்பைக் கொண்ட கட்டமைப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

5,369 காலியிடங்கள்..!! மத்திய அரசு வேலை..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Wed Mar 8 , 2023
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 100 வகைமைகள் பட்டப்படிப்பு நிலையிலும், 169 வகைமைகள் மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வரும் 27ஆம் […]
central govt jobs 1 1598945180

You May Like