இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான் கேப்டனாக வலம் வந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், குடும்பம் என்று நிம்மதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். மீண்டும் ஐபிஎல்-லுக்காக ப்ராக்டிஸ் செஷனில் இறங்கியுள்ள அவரது பேட்டியில் இருந்து ஒரு க்ளிப்பிங் சமீபத்தில் வைரலாகி வருகிறது. எங்காவது வெளியில் செல்லும்போது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்தியாவின் எந்த விஷயம் உங்களுக்கு இப்போது அது கண்டிப்பாக வேண்டும் என்று தோன்ற வைக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தோனி, “ரொம்ப பெரிய விஷயம் ஒன்னும் இல்ல. டீ தான். அந்த டீ, சர்க்கரையோட… கண்டிப்பா நான் விரும்புற விஷயம். ப்ராக்டிஸ்க்கு முன்னாடி டீ குடிக்கலாம், ப்ராக்டிஸ் முடிஞ்சு டீ குடிக்கலாம்ன்னு எப்போவும் டீ குடிக்க தோனிட்டே இருக்கும். ஆமாம், டீ கண்டிப்பா நம் மனதிற்கு நெருக்கமான ஒன்று, ஒருவேளை நாம் அப்படிப்பட்டா தலைமுறையில் இருந்து வந்ததாலோ என்னவோ… டீ மீது அவ்வளவு பிரியம்” என்றார்.
மேலும் அதுவே பல இடங்களில் சங்கடத்தை ஏற்படுத்தும். அதுவே சங்கடமான சூழலையும் தரும். எங்காவது போனாலோ, ஸ்டேடியம் போகும்போதோ, ஜிம் போகும்போதோ, டீ சாப்புட்றீங்களான்னு கேட்டா கண்டிப்பா ‘நோ’ சொல்றது ரொம்ப கஷ்டம். இப்போ என் கிட்ட ஏதோ குளோப் ஜாமுன், ஜிலேபி ஏதாவது வேணுமான்னு கேட்டா ரொம்ப ஈஸியா ‘நோ.. நோ… வேண்டாம்’ ன்னு சொல்லிடுவேன். ஆனா டீ வேணுமான்னு கேட்டா, ‘நல்லது கொடுங்க…’ன்னு தான் சொல்லுவேன்” என்று கூறினார்.