”இனி யாரும் இந்த விஷயத்துக்காக என்னை தொடர்பு கொள்ளாதீங்க”..!! உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!!

விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘கண்ணை நம்பாதே’. மு.மாறன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மாறன் இயக்கிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் பார்த்துட்டு, அதில் நடித்த அருள்நிதிக்கு போன் செய்து, ‘படம் நல்லாயிருக்கு’ என்றேன். பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ எனக்கு வந்த கதை. அதில் ரொம்ப மெனக்கெட வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். அதற்கு அருள்நிதி சரியாக இருப்பார் என்று நான்தான் அனுப்பி வைத்தேன்.


இப்போது, அருள்நிதி இயக்குநர் மாறனை என்னிடம் அனுப்பி கதைக் கேட்கச் சொன்னார். அவர் முதலில் சொன்னது காதல் கதை. எனக்கு க்ரைம் த்ரில்லரில் நடிக்க வேண்டும் என்று ஆசை. பிறகு அப்படியொரு கதையை சொன்னார். அதுதான் ‘கண்ணை நம்பாதே’. இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கிறது. இயக்குநர் மாறன் கடினமாக உழைத்திருக்கிறார். கொரோனாவால் படம் தாமதமாகிவிட்டது. ஷூட்டிங் தொடங்கும்போது நான் தீவிர அரசியலுக்கு வருவேனா என்பது தெரியாது. முதல் ஷெட்யூல் முடிந்ததும் எம்.பி. தேர்தல் பிரச்சாரம், அடுத்து இளைஞரணி செயலாளர், அப்புறம் சட்டமன்ற உறுப்பினர், இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன். நான் ஒரே பாடலில் பெரிதாகிவிட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். நான்கரை ஆண்டுகள் உழைத்துதான் அமைச்சரானேன். ரெட் ஜெயண்ட்டில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதைப் பார்த்துக்கொள்வது அர்ஜுன் துரை, செண்பகமூர்த்திதான். இனி சினிமா தொடர்பாக யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்றார்.

CHELLA

Next Post

கோடையில் செல்லப்பிராணிகளை பாதுகாப்பது எப்படி..? இதை மட்டும் செய்து பாருங்க..!! குதூகலமா இருக்கும்..!!

Mon Mar 13 , 2023
கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். ஆனால், செல்லப்பிராணிகள் அதுவும் குறிப்பாக நாய்கள் கோடையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. அதனால் கோடையில் நாய்களுக்கு விதைகள் நீக்கிய தர்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகள், செலரி ஆகியவற்றை உண்ணத் தரலாம். அதேபோல் நாய்கள் மொட்டை வெயிலில் விடாமல் வெப்பம் தாக்கம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு மாற்றலாம். கோடையில் நாய்களை […]
Dog

You May Like