பணி நிமித்தமாக செல்லும்போது பலாத்காரம்..!! ஹோட்டல் அறையில் கதறிய வெளிநாட்டு பெண்..!! பகீர் சம்பவம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மனிஷ்காந்தி. 34 வயதான இவர் மீது, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரும், போலந்து நாட்டைச் சேர்ந்தவருமான அம்போலி என்பவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், கடந்த 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண், மனுஷ்காந்தியுடன் தொழில் சம்பந்தமாக ஜெர்மனி சென்றிருக்கிறார். அப்போது ஜெர்மனியில் ஹோட்டல் அறையில் மனுஷ்காந்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.


மேலும், இதை யாரிடமாவது சொன்னால், ஆபாச படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன அந்த பெண் இது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில், மனிஷ்காந்தியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.. மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம்..

Mon Mar 13 , 2023
இந்தியாவின் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று பேசிய ராஜ்நாத் சிங் “ இந்த அவையில் உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துள்ளார். அவரது அறிக்கையை இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்க வேண்டும்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் […]
123dd5dd21714d2a5369f2db7d63c05e1f2706cabee33eaa2511be7e9c5ea8be

You May Like