கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பாதிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் திடீரென காரில் வந்த கும்பல் பாதிரியாரை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது. ஆனால், இதுதொடர்பாக பாதிரியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பாதிரியார் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது. அதில், டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது, நெருக்கமான வீடியோக்கள் வைரலாகியது.
இது போன்ற பாலியல் புகார்கள் அந்த பாதிரியார் மீது உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவாலயம் வரும் பெண்களிடம் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாதிரியாரை தாக்கி லேப்டாப்பை எடுத்து சென்றவர்கள் கொல்லங்கோடு சேர்ந்தவர்கள் தான் என்றும் அவர்கள் தான் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.