fbpx

இன்ஸ்டாவில் பழக்கமான சிறுமி..!! வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த சிறுவன்..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்த 13 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எதிர் தரப்பில் பேசிய ஆண் நபர் சிறுமியை அயனாவரம் பேருந்து நிலையத்தில் விட்டுச் செல்வதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும் சிறுமிக்கும், சிறுவனுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளதையும், இதன் மூலம் சிறுமி அந்த சிறுவனை நம்பி சென்றதும் தெரியவந்துள்ளது. அதன் பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமிக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Chella

Next Post

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை எப்படி இருக்கு..? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!

Thu Mar 16 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத்திட்ட […]

You May Like