மணப்பெண்ணின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மணப்பெண்ணின் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி மணமகன் திருமணத்தையே நிறுத்தியதால் மணப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் மணமகன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மணமகளின் தந்தை வரதட்சணையை கொடுக்காதது தான் திருமணத்தை நிறுத்த காரணம் எனக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.