ஐஸ் வாட்டர் வேண்டாம்!… வெயிலுக்கு இதமான மண்பானை தண்ணீர்!… உடலுக்கு இத்தனை நன்மைகளா?…

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. இந்த நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.


முன்னோர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகளை கடைபிடித்தாலே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால், அந்தகால உணவு முறைகள் முழுவதும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. இதனால், முன்னோர்கள் நீண்டகாலம் ஆரோக்கியதுடனும், முதுமையிலும் நல்ல ஆயுளை கொண்டிருந்தனர். சாப்பாடு செய்வது முதல் தண்ணீர் குடிப்பது, தேக்கிவைப்பது என அனைத்திலும் மண்பானைகளை அந்தகாலத்தில் மக்கள் உபயோகித்து வந்தனர். ஆனால் தற்போது நவீன காலத்திற்கேற்ப அனைவரது வீட்டிலும் குளிர்ச்சாதனப் பெட்டியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தகாலத்தில் நோய்நொடியுடன் மக்கள் வாழப்பழகிக்கொண்டனர்.

பெரியவர்கள், வெயில் காலங்களில் மண் பானை நீர் அருந்தும்போது தேன் போன்று சுவைக்கும் என்பார்கள். அது உண்மைதான். இயற்கையாகவே மண் பானைகளில் நீர் குளிர்ச்சியாக மாறும். அதுமட்டுமன்றி அந்த நீரின் சுவையும் எதிலும் கிடைக்காத தனித்துவமானது. இதற்குக் காரணம் மண் பானையில் உள்ள மண் நீரை உறிஞ்சி அதை வெளியேற்றும் இது இயற்கையாக நிகழக்கூடியது. அதேபோல் திறக்கும்போது உட்செல்லும் காற்று உள்ளேயே சூழ்ந்து கொண்டு நீரால் குளிர்சியாகிவிடும். அதனால்தான் நீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது. கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர் தான் சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.

மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். இயற்கையான காரத் தன்மை கொண்டுள்ளதால் உடலில் பி.எச் அளவை சீராக வைக்க உதவுவது. இது உடலுக்கு மிகவும் முக்கியமான நீரின் அளவை தக்க வைக்க உதவக் கூடியது. இது பானை நீரை அருந்தும் போது இயற்கையாகவே உடலுக்கு கிடைக்கிறது.குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.

KOKILA

Next Post

இதுலையுமா!... கூகுள் டிரான்ஸ்லேட்டையும் விட்டுவைக்காத ஹேக்கர்கள்!... வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடி!

Sun Mar 19 , 2023
கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் என்று Barracuda Networks நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மொழி தெரியாதவர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு அர்த்தம் தேவை என்றால் அனைவரும் கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கூகுள் ட்ரான்ஸ்லேட் இணைய இணைப்புகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் சிலருடைய தனிப்பட்ட தகவல்களை தேடி வருவதாகவும் அதன் மூலம் அவர்களுடைய வங்கி […]
google translate 1

You May Like