சிறந்த ஆர்கானிக் விவசாயிக்கு, நம்மாழ்வார் விருதுடன், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று.. வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.. இந்நிலையில், இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ வேளாண்மை செழித்து வளரும் திட்டங்களை வகுக்க தனி பட்ஜெட்டை அரசு உருவாக்கி உள்ளது.. அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். மண்ணின் தன்மைக்கேற்ற பயிர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன..
வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.. 2020-21-ல் ஒப்பிடுகையில், 2021-22-ல் வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது..” என்று தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
- 2,064 கிராமங்களில் விவசாயிகளை உள்ளடக்கிய வேளாண் முன்னேற்ற குழுக்கள் அமைக்கப்படும்..
- பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கான ரூ.5 லட்சம் பரிசு சிறுதானிய விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
- அதிக விளைச்சல் காட்டும் சிறுதானிய விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
- கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
- ஆர்கானிக் எனப்படும் அங்கக வேளாண் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படுவோருக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.. அந்த விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
- மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களை சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்க ரூ.11 கோடி ஒதுக்கீடு
- 385 வட்டார வளர்ச்சி மையங்களில் விவசாயிகளுக்கான சேவைகள் வழங்க வேளாண் மின்னணு உதவி மையம் தொடங்கப்படும்
- மின்னணு உதவி மையங்களை செயல்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
- சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு
- உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும்..