சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நெடுந்தொடர் ரோஜா. இந்த நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்தவர் நல்கார் பிரியங்கா. இந்த சீரியலை பிரபல யூடியூபர்கள், நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந் தொடரில் சீதாவை கதாநாயகனின் சித்தி அழகி இல்லை என கூறி வறுத்தெடுக்கிறார்.
இதனை மீறி நாயகனும் – நாயகியும் எப்படி ஒன்றிணையப்போகிறார்கள் என்பதே கதைக்கரு ஆகும். இந்நிலையில், நடிகை நல்கார் பிரியங்காவுக்கு மலேஷியாவில் உள்ள முருகன் கோவிலில் திடீரென திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.