மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவித்தொகை திட்டம் அதில் ஒன்றாகும். மற்றொன்று பேகம் ஹசரத் மஹல் திட்டமாகும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமரின் கல்வி அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை போதுமான நிதி வசதியை கொண்டுள்ளது. அதன் நிதியில் இருந்து வரும் வட்டி வருவாய் இந்த அறக்கட்டளையின் பணிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/03/IMG_20230325_055525-1024x986.jpg)